Thursday, June 28, 2018

முதலீட்டை உடனே திரும்ப பெறுங்கள்: ஜெப்பே


புது­டில்லி : இந்­தி­யா­வின் பிர­ப­ல­மான, கிரிப்­டோ­க­ரன்சி எக்ஸ்­சேஞ்ச் ஆன, ஜெப்பே, அவ­சர அறி­விப்பு ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது. தங்­கள் முத­லீட்டை ரூபா­யாக திரும்ப பெற்­றுக்­கொள்ள விரும்­பும் வாடிக்­கை­யா­ளர்­கள், உடனே அணுகி, பணத்தை பெற்­றுக்­கொள்­ளு­மாறு அந்­நி­று­வ­னம் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

கடந்த ஏப்­ர­லில், ரிசர்வ் வங்கி ஒரு சுற்­ற­றிக்­கையை, அதன் கட்­டுப்­பாட்­டுக்­குள் வரும் வங்­கி­கள் உள்­ளிட்ட நிதி நிறு­வ­னங்­க­ளுக்கு அனுப்­பி­யது. அதில், கிரிப்­டோ­க­ரன்சி எனும் மெய்­நி­கர் நாணய வணி­கத்­தில் ஈடு­படும் நிறு­வ­னங்­க­ளு­ட­னான தொடர்பு தடை செய்­யப்­ப­டு­வ­தா­க­வும், மூன்று மாதங்­க­ளுக்­குள்­ளாக, வங்­கி­கள் இத்­த­கைய வணி­கத்­தில் ஈடு­படும் நிறு­வ­னங்­க­ளின் தொடர்­பி­லி­ருந்து வெளி­யே­றி­வி­டும்­ப­டி­யும் அறி­வு­றுத்தி இருந்­தது. அந்த காலக்­கெடு வரும் ஜூலை, 6ம் தேதி­யு­டன் முடி­வ­டை­கிறது.

இந்­நி­லை­யில், மெய்­நி­கர் நாணய சந்­தை­யான ஜெப்பே, முத­லீட்டை ரூபா­யாக திரும்ப பெற விரும்­பும் வாடிக்­கை­யா­ளர்­கள், விரைந்து தொகையை பெற்­றுக்­கொள்­ளு­மாறு அறி­விப்பு செய்­துள்­ளது.

இது குறித்து அந்­நி­று­வ­னம் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது: ரிசர்வ் வங்­கி­யின் அறி­விப்பை அடுத்து, வங்­கி­களில் ரூபா­யாக டெபா­சிட் செய்­வதோ அல்­லது எடுப்­பதோ இனி இய­லாத ஒன்­றா­கி­வி­டும். இத­னால், மெய்­நி­கர் நாண­யங்­களில் ரூபா­யில் வர்த்­த­கம் செய்­வது நின்­று­வி­டும். எனவே, வாடிக்­கை­யா­ளர்­கள் பணத்தை திரும்ப பெற விரும்­பி­னால், உடனே வந்து பெற்­றுக்­கொள்­ள­வும். காலக்­கெ­டு­வுக்கு பிறகு முடி­யா­மல் போய்­வி­டும்.

மெய்­நி­கர் நாணய வணி­கத்­தில் ஈடு­பட்­டுள்ள நிறு­வ­னங்­கள், ரிசர்வ் வங்­கி­யின் இந்த சுற்­ற­றிக்­கைக்கு எதி­ராக உச்ச நீதி­மன்­றத்­துக்கு சென்­றுள்ளன. இவ்­வாறு ஜெப்பே அறி­வித்­துள்­ளது. இதற்­கி­டையே மெய்­நி­கர் நாணய வணிக நிறு­வ­னங்­கள், ரிசர்வ் வங்­கிக்கு கீழ் வராத, பொதுத்­துறை வங்­கி­யான, ஸ்டேட் பேங்க் ஆப் சிக்­கிம் – ஐ ஒரு வாய்ப்­பாக பயன்­ப­டுத்­த­லாம் என, தெரி­வித்­துள்­ளன.


THANKS FOR 
http://business.dinamalar.com/news_details.asp?News_id=42759

No comments:

Post a Comment