Monday, July 2, 2018

பான் - ஆதார்' இணைப்பு 2019 மார்ச் வரை நீட்டிப்பு PAN-AADHAAR LINK DATE EXTENDED MARCH 2019

புதுடில்லி : வருமான வரி நிரந்தர கணக்கு எண் எனப்படும், 'பான்' கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம், 2019, மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசு வழங்கும் பல்வேறு சேவைகளுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்காக, இந்தாண்டு மார்ச், 31 வரை அவகாசம் தரப்பட்டிருந்தது. அந்த அவகாசத்தை நீட்டிக்கும்படி, இந்தாண்டு துவக்கத்தில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இறுதி உத்தரவு :

அந்த உத்தரவில், 'ஆதார் தொடர்பான வழக்குகளில், ஐந்து நீதிபதிகள் அடங்கிய
அரசியல் சாசன அமர்வு, இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை, ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.

ஆதார் தொடர்பான வழக்கில், இறுதி தீர்ப்பு அளிக்கப்படாத நிலையில், மத்திய அரசு வரித் துறையின் கொள்கை உருவாக்கும் பிரிவான, சி.பி.டி.டி., எனப்படும், மத்திய நேரடி வரிகள் வாரியம், பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசத்தை, 2019 மார்ச், 31 வரை நீட்டித்துள்ளது.
அவகாசம் :

ஐந்தாவது முறையாக, இந்த அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும், 33 கோடி பேருக்கு, பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில், 16.65 கோடி பான் கார்டுகள், மார்ச் வரை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன

THANKS FOR 
http://www.dinamalar.com/news_detail.asp?id=2052832

Saturday, June 30, 2018

ஆடிட்டர்கள் திடீரென விலக என்ன காரணம்? : நிறுவனங்களிடம் விளக்கம் கோருகிறது மத்திய அரசு

புதுடில்லி: கணக்கு தணிக்கை செய்­யும் ஆடிட்­டர்­க­ளின் வில­க­லுக்­கான கார­ணங்­களை தெரி­விக்­கு­மாறு, சம்­பந்­தப்­பட்ட கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­க­ளுக்கு, மத்­திய அரசு கடி­தம் அனுப்­பி­யுள்­ளது.கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­க­ளின் வரவு – செலவு கணக்கை தணிக்கை செய்­யும் பணி­யில் இருந்து ஆடிட்­டர்­கள் வில­கு­வது, சமீப கால­மாக அதி­க­ரித்­துள்­ளது.புதிய கம்­பெ­னி­கள் சட்­டம், கார்ப்­ப­ரேட் நிறு­வ­னத்­தின் நிதி முறை­கே­டு­க­ளுக்கு, ஆடிட்­ட­ரை­யும் பொறுப்­பாக்கி, அப­ரா­த­மு­டன், 10 ஆண்­டு­கள் சிறை தண்­டனை அளிக்க வகை செய்­கிறது.இதன் கார­ண­மாக, வர்த்­த­கம் மற்­றும் நிதி விப­ரங்­களை சரி­வர அளிக்­காத நிறு­வ­னங்­களை விட்டு, ஆடிட்­டர்­கள் வெளி­யே­று­கின்­ற­னர்.கடந்த மே மாதம், பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லி­டப்­பட்ட, 42 நிறு­வ­னங்­களில் இருந்து, ஆடிட்­டர்­கள் திடீ­ரென வில­கி­னர். இதை­ய­டுத்து, அந்த நிறு­வ­னங்­களில், நிதி முறை­கே­டு­கள் நடை­பெற்­றுள்­ளதா... ஆடிட்­டர்­கள் வில­க­லுக்கு உண்­மை­யான கார­ணம் என்ன என்­பதை விசா­ரிக்­கு­மாறு, மேற்கு மண்­டல நிறு­வ­னங்­கள் பதி­வா­ளர் இயக்­கு­னர்­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.
இது குறித்து, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­களில் இருந்து, திடீ­ரென அதிக அள­வில் ஆடிட்­டர்­கள் வெளி­யேறி வரு­கின்­ற­னர். அதற்­கான கார­ணத்தை தெரி­விக்­கு­மாறு, அந்த நிறு­வ­னங்­க­ளுக்கு அமைச்­ச­கம் கடி­தம் அனுப்­பி­யுள்­ளது.அதில், வில­க­லுக்­கான அடிப்­படை கார­ணங்­களை அறிந்து கொள்­ளும் வகை­யில், 45 கேள்­வி­கள் கேட்­கப்­பட்­டுள்­ளன. அவற்­றுக்கு, நிறு­வ­னங்­கள் அளிக்­கும் பதிலை பொறுத்து, அடுத்த கட்ட நட­வ­டிக்கை துவங்­கும். ஒரு நிறு­வ­னத்­தின் அன்­றாட நிதிப் பரி­வர்த்­த­னை­களை அறிந்­தி­ருக்­கும் ஆடிட்­ட­ருக்கு, அந்­நி­று­வ­னத்­தின் நிதி தவ­றாக கையா­ளப்­ப­டு­வது குறித்து எது­வுமே தெரி­யாது என்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அப்­படி இருக்­கும்­போது, உட­ன­டி­யாக அது குறித்து நிறு­வ­னங்­க­ளி­டம் விளக்­கம் கேட்க வேண்­டி­யது, ஆடிட்­ட­ரின் கடமை. அவ்­வாறு இருக்­கும்­பட்­சத்­தில், ஆடிட்­டர் ஏன் தலை­யி­ட­வில்லை என்ற கேள்வி எழு­கிறது.அத­னால், ஆடிட் நிறு­வ­னங்­கள், ஆடிட் குழு தலை­வர்­கள், தனி ஆடிட்­டர்­கள் ஆகி­யோ­ரை­யும் அழைத்து, வில­க­லுக்­கான கார­ணம் குறித்து விசா­ரிக்க, அமைச்­ச­கம் முடிவு செய்­துள்­ளது. நிறு­வ­னங்­கள் சட்­டத்­தின்­படி, ஒரு நிறு­வ­னத்­தின் ஆண்டு கணக்­கு­கள் மற்­றும் நிதி நில­வ­ரம் குறித்த வெளிப்­ப­டை­யான தக­வல்­களை அளிக்க வேண்­டிய முக்­கிய பொறுப்பு, ஆடிட்­ட­ருக்கு உள்­ளது. அந்த தக­வல்­கள், உரிய கணக்­கீட்டு நடை­மு­றைப்­படி அளிக்­கப்­பட்­டுள்­ளதா என்­பதை ஆய்வு செய்­யும் உரி­மை­யை­யும், சட்­டம் வழங்­கு­கிறது. அத­னால், ஒரு நிறு­வ­னத்­தில் இருந்து ஆடிட்­டர் விலகி, புதிய ஆடிட்­டர் இணை­யும்­போது, அதற்­கான உண்­மை­யான கார­ணத்தை, இரு தரப்­பி­ன­ரி­டம் அறிந்து கொள்ள, அமைச்­ச­கம் விரும்­பு­கிறது. தற்­போது, அதற்­கான நட­வ­டிக்கை துவங்­கி­யுள்­ளது.இவ்­வாறு அவர் தெரி­வித்­தார்.
சமீ­பத்­தில், மன்­ப­சந்த் பிவ­ரே­ஜஸ், வக்­ரங்கி, ஜெட் ஏர்­வேஸ், எல் அண்டு டி கப்­பல் பிரிவு, அட்­லாண்டா, ஐநாக்ஸ் விண்டு உள்­ளிட்ட நிறு­வ­னங்­களில் இருந்து, ஆடிட்­டர்­கள் வெளி­யே­றி­னர்.இதற்கு, நிறு­வ­னங்­கள் வெளிப்­ப­டை­யாக விப­ரங்­களை தெரி­விக்­கா­ததே கார­ணம் என, கூறப்­ப­டு­கிறது


THNAKS FOR THE 
http://business.dinamalar.com/news_details.asp?News_id=42781&cat=1

Friday, June 29, 2018

வேலையிழந்த 30 நாட்களுக்கு பின்னர் 75 சதவீத பிஎப் (EPF) தொகையை எடுத்துக் கொள்ள அனுமதி

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் சந்தாதாரர்கள், வேலையிழந்த 30 நாட்களுக்கு பின்னர் 75 சதவீத பிஎப் தொகை எடுத்துக் கொள்ளலாம்.
தொழிலாளர்கள் வேலையிலிருந்து விலகிய ஒரு மாதத்துக்கு பின்னர் தங்களது இபிஎப் கணக்கிலிருந்து 75 சதவீத தொகையை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்க இபிஎப் அமைப்பு முடிவு செய்துள்ளது. மேலும் மீதமுள்ள 25 சதவீத தொகையை 2 மாதங்களுக்கு பின்னர் எடுத்துக் கொள்ளவும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் வகை செய்கிறது.
தொழிலாளர்கள் வேலையிலிருந்து விலகிய 30 நாட்களில் தங்களது பிஎப் கணக்கிலிருந்து முன்பணம் எடுத்துக் கொள்வதை அனுமதிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி பிஎப் கணக்கிலிருந்து 75 சதவீதத்தை எடுத்துக் கொண்டு கணக்கை அப்படியே தொடரலாம் என்று மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வர் கூறினார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் மத்திய காப்பாளர் குழு தலைவராகவும் கங்வார் உள்ளார். காப்பாளர் குழு கூட்டத்துக்கு பின்னர் இதனை அமைச்சர் கூறினார்.
தற்போதுவரை தொழிலாளர்கள் வேலையை விட்டு விலகினால் அவர்களது பிஎப் கணக்கிலிருந்து இரண்டு மாதங்களுக்கு பின்னரே இபிஎப் கணக்கிலிருந்து தொகையை எடுக்க முடியும்.
இந்த புதிய மாற்றத்தின் மூலம் தொழிலாளர்கள் தங்களது இபிஎப் கணக்கை அப்படியே தொடரவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிதாக வேலைக்குச் சேர்ந்தால் இந்த கணக்கை பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும் தொழிலாளர்கள் வேலையிழந்த 30 நாட்களில் 60 சதவீத பணத்தை எடுக்கவே முன்மொழியப்பட்டிருந்தது, ஆனால் நேற்று நடைபெற்ற மத்திய காப்பாளர் குழு கூட்டத்தில் இந்த அளவை 75 சதவீதம் உயர்த்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இடிஎப் பண்டு நிறுவன முதலீடு செய்வதும் தொடரும் என்றும் அமைச்சர் கூறினார். -பிடிஐ

THANKS FOR 
THE HINDU TAMIL PAPER
http://tamil.thehindu.com/business/article24265232.ece?utm_source=HP-RT&utm_medium=hprt-most-read

இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத சரிவு: அமெரிக்கா மிரட்டல் எதிரொலி

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில் இன்று வரலாற்றில் இல்லாத அளவாக டாலருக்கு எதிராக 69 என்ற அளவில் கடும் சரிவை சந்தித்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அண்மைகாலமாகவே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இதுமட்டுமின்றி அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தக போரை சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டுள்ளது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேற்கொண்டு வரும் வர்த்தகப் போரால் சில நாட்களாக ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்து வருகிறது.
இந்நிலையில் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என இந்தியாவுக்கு நேற்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. நவம்பருக்குள் ஈரானிடம் இருந்து முழுமையாக கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.
ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தியை முடக்கும் அமெரிக்காவின் இந்த திடீர் மிரட்டலால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் சூழல் உள்ளது. குறிப்பாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் ஏறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மேலும் சரிந்தது.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ரூ 68.25 என்ற அளவில் இருந்தது. ஆனால் புதன்கிழமை 36 காசுகள் மேலும் சரிந்து ரூ 68.61 என்ற அளவுக்கு கீழிறங்கியது. வியாழக்கிழமையான இன்று ரூபாய் மதிப்பு மேலும் சரிந்து 69.10 ஆக வீழ்ச்சியடைந்தது. இந்த சரிவு வரலாற்றில் இல்லாத சரிவாகும்.
நிலைமை சீரடையாவிடில் அடுத்த சில வாரங்களில் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ரூ 70 என்ற அளவுக்குக் கீழிறங்கக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
THANKS TO 
THE HINDU TAMIL PAPER
http://tamil.thehindu.com/business/article24277003.ece

Thursday, June 28, 2018

மூன்றாம் தரப்பு தணிக்கை தயாராகும் ஜி.எஸ்.டி.என்., நிறுவனம்

சரக்கு மற்­றும் சேவை வரியை நிர்­வ­கிக்­கும் நிறு­வ­ன­மான, ஜி.எஸ்.டி.என்., அதன் மென்­பொ­ருளை, மூன்­றாம் தரப்பு தணிக்­கைக்கு உட்­ப­டுத்த இருப்­ப­தாக, அதன் தலைமை செயல் அதி­காரி, பிர­காஷ் குமார் தெரி­வித்­துள்­ளார்.

ஜி.எஸ்.டி.என்., நிறு­வ­னம், சரக்கு மற்­றும் சேவை வரியை வசூ­லிக்க தேவை­யான தக­வல் தொழில்­நுட்­பத்தை வழங்கி வரு­கிறது. இதற்கு தேவைப்­படும் மென்­பொ­ருளை, இன்­போ­சிஸ் நிறு­வ­னம் உரு­வாக்கி கொடுத்­துள்­ளது. இதில், 1.11 கோடி வணி­கங்­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. இந்­நி­லை­யில், இந்­நி­று­வ­னத்­தின் மென்­பொ­ருள் பாது­காப்பு உள்­ளிட்­ட­வற்றை, மூன்­றாம் தரப்பு தணிக்­கைக்கு உட்­ப­டுத்த இருப்­ப­தாக, பிர­காஷ் குமார் தெரி­வித்­துள்­ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது: வங்­கி­கள் மற்­றும் நிதி நிறு­வ­னங்­கள், மூன்­றாம் தரப்பு தணிக்­கைக்கு தங்­களை உட்­ப­டுத்­திக்­கொள்­வது வழக்­க­மான நடை­மு­றை­யாக உள்­ளது. அதே போன்ற நடை­மு­றையை, ஜி.எஸ்.டி.என்., நிறு­வ­னத்­தி­லும் கொண்டு வர இருக்­கி­றோம். எப்­போ­தெல்­லாம், ஜி.எஸ்.டி., குறித்த சட்­டங்­கள் மாற்­றத்­துக்கு உள்­ளா­கி­றதோ அல்­லது எப்­போ­தெல்­லாம் சுற்­ற­றிக்கை வரு­கி­றதோ அப்­போ­தெல்­லாம், இன்­போ­சிஸ் மூலம் நாங்­கள் மென்­பொ­ரு­ளில் மாற்­றம் செய்­கி­றோம்.

இந்த மாற்­றங்­களை மூன்­றாம் தரப்பு தணிக்­கைக்கு உட்­ப­டுத்த விரும்­பு­கி­றோம். கடந்த, 2017 ஜூலை, 1ம் தேதி முதல், ஜி.எஸ்.டி.என்., நிறு­வ­னம், 11.5 கோடி வரி தாக்­கல்­க­ளை­யும், 376 கோடி விலை பட்­டி­யல்­க­ளை­யும் கையாண்­டு உள்ளது. தற்­போது, 1.11 கோடி வணி­கங்­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. இதில், 63.76 லட்­சம் வணி­கங்­கள், சேவை வரி மற்­றும் வாட் வரி­யி­லி­ருந்து மாறி வந்­துள்­ளன. மேலும், 47.72 லட்­சம் வணி­கங்­கள், புதி­தாக பதிவு பெற்­றுள்­ளன. 17.61 லட்­சம் வணி­கங்­கள், கலவை வரி திட்­டத்தை, ஜி.எஸ்.டி.,யின் கீழ் ஏற்­றுள்­ளன. இவ்­வாறு அவர் தெரி­வித்­துள்­ளார்.


THANKS

http://business.dinamalar.com/news_details.asp?News_id=42755

‘மைண்டு டிரீ’ நிறுவனர் பங்குகள் விற்பனை


புது­டில்லி : தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான, ‘மைண்­டு­ டிரீ’ நிறு­வ­னத்­தின் நிறு­வ­னர்­கள், அந்­நி­று­வ­னத்­தில், தங்­க­ளுக்கு இருக்­கும் பங்­கு­களை விற்­கும் முயற்­சி­யில் இறங்கி இருக்­கின்­ற­னர்.

தக­வல் தொழில்­நுட்ப துறை­யில், மென்­பொ­ருள் சேவை பிரி­வில் இயங்கி வரும் முன்­னணி நிறு­வ­னங்­களில் ஒன்று, மைண்­டு­ டிரீ. இந்­நி­று­வ­னத்­தின் நிறு­வ­னர்­கள், தங்­கள் பங்­கு­களை விற்­பனை செய்­வ­தற்­காக, இரண்டு வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளு­டன் பேசி வரு­வ­தாக செய்­தி­கள் வரு­கின்­றன. குறிப்­பாக, ஜப்­பான் நாட்­டைச் சேர்ந்த, என்.இ.சி., கார்ப் நிறு­வ­னம், பங்­கு­களை வாங்­கு­வது குறித்து பேச்சு நடத்தி வரு­கிறது.

மைண்­டு­ டிரீ நிறு­வ­னத்­தில், சுப்­ரதோ பக்‌ஷி, கே.நட­ரா­ஜன், என்.எஸ்.பார்த்­த­சா­ரதி மற்­றும் நிறு­வ­னத்­தின் தலைமை செயல் அதி­கா­ரி­யான, ரோஸ்­டவ் ராவ­ணன் ஆகி­யோ­ரின் பங்­கு­களை வாங்­கு­வது குறித்து பேச்சு நடை­பெ­று­கிறது. இந்­நி­று­வ­னத்­தில் இவர்­கள் வசம், 13.35 சத­வீத பங்­கு­கள் உள்­ளன; இவற்­றின் தற்­போ­தைய சந்தை மதிப்பு, 2,087.15 கோடி ரூபா­யா­கும். இந்த பங்­கு­களை வாங்­கு­வ­தற்­காக, என்.இ.சி., கார்ப் நிறு­வ­னம், பேங்க் ஆப் அமெ­ரிக்கா மெரில் லிஞ்ச் நிறு­வ­னத்தை ஆலோ­ச­க­ராக நிய­மித்­துள்­ளது.

இதற்­கி­டையே, மைண்­டு­ டிரீ நிறு­வ­னத்­தில், 20 சத­வீ­தத்­துக்­கும் அதி­க­மான பங்­கு­களை வைத்­தி­ருக்­கும், ‘கேப் காபி டே’ நிறு­வ­னத்­தின் நிறு­வ­னர், வி.ஜி.சித்­தார்த்­தா­வும் தன் பங்­கு­களை விற்­று­வி­டும் எண்­ணத்­தில் இருப்­ப­தாக செய்­தி­கள் வரு­கின்­றன.

THANKS FOR 

http://business.dinamalar.com/news_details.asp?News_id=42757

முதலீட்டை உடனே திரும்ப பெறுங்கள்: ஜெப்பே


புது­டில்லி : இந்­தி­யா­வின் பிர­ப­ல­மான, கிரிப்­டோ­க­ரன்சி எக்ஸ்­சேஞ்ச் ஆன, ஜெப்பே, அவ­சர அறி­விப்பு ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது. தங்­கள் முத­லீட்டை ரூபா­யாக திரும்ப பெற்­றுக்­கொள்ள விரும்­பும் வாடிக்­கை­யா­ளர்­கள், உடனே அணுகி, பணத்தை பெற்­றுக்­கொள்­ளு­மாறு அந்­நி­று­வ­னம் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

கடந்த ஏப்­ர­லில், ரிசர்வ் வங்கி ஒரு சுற்­ற­றிக்­கையை, அதன் கட்­டுப்­பாட்­டுக்­குள் வரும் வங்­கி­கள் உள்­ளிட்ட நிதி நிறு­வ­னங்­க­ளுக்கு அனுப்­பி­யது. அதில், கிரிப்­டோ­க­ரன்சி எனும் மெய்­நி­கர் நாணய வணி­கத்­தில் ஈடு­படும் நிறு­வ­னங்­க­ளு­ட­னான தொடர்பு தடை செய்­யப்­ப­டு­வ­தா­க­வும், மூன்று மாதங்­க­ளுக்­குள்­ளாக, வங்­கி­கள் இத்­த­கைய வணி­கத்­தில் ஈடு­படும் நிறு­வ­னங்­க­ளின் தொடர்­பி­லி­ருந்து வெளி­யே­றி­வி­டும்­ப­டி­யும் அறி­வு­றுத்தி இருந்­தது. அந்த காலக்­கெடு வரும் ஜூலை, 6ம் தேதி­யு­டன் முடி­வ­டை­கிறது.

இந்­நி­லை­யில், மெய்­நி­கர் நாணய சந்­தை­யான ஜெப்பே, முத­லீட்டை ரூபா­யாக திரும்ப பெற விரும்­பும் வாடிக்­கை­யா­ளர்­கள், விரைந்து தொகையை பெற்­றுக்­கொள்­ளு­மாறு அறி­விப்பு செய்­துள்­ளது.

இது குறித்து அந்­நி­று­வ­னம் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது: ரிசர்வ் வங்­கி­யின் அறி­விப்பை அடுத்து, வங்­கி­களில் ரூபா­யாக டெபா­சிட் செய்­வதோ அல்­லது எடுப்­பதோ இனி இய­லாத ஒன்­றா­கி­வி­டும். இத­னால், மெய்­நி­கர் நாண­யங்­களில் ரூபா­யில் வர்த்­த­கம் செய்­வது நின்­று­வி­டும். எனவே, வாடிக்­கை­யா­ளர்­கள் பணத்தை திரும்ப பெற விரும்­பி­னால், உடனே வந்து பெற்­றுக்­கொள்­ள­வும். காலக்­கெ­டு­வுக்கு பிறகு முடி­யா­மல் போய்­வி­டும்.

மெய்­நி­கர் நாணய வணி­கத்­தில் ஈடு­பட்­டுள்ள நிறு­வ­னங்­கள், ரிசர்வ் வங்­கி­யின் இந்த சுற்­ற­றிக்­கைக்கு எதி­ராக உச்ச நீதி­மன்­றத்­துக்கு சென்­றுள்ளன. இவ்­வாறு ஜெப்பே அறி­வித்­துள்­ளது. இதற்­கி­டையே மெய்­நி­கர் நாணய வணிக நிறு­வ­னங்­கள், ரிசர்வ் வங்­கிக்கு கீழ் வராத, பொதுத்­துறை வங்­கி­யான, ஸ்டேட் பேங்க் ஆப் சிக்­கிம் – ஐ ஒரு வாய்ப்­பாக பயன்­ப­டுத்­த­லாம் என, தெரி­வித்­துள்­ளன.


THANKS FOR 
http://business.dinamalar.com/news_details.asp?News_id=42759

புள்ளியியல் தினத்தை சிறப்பிக்க 125 ரூபாய் நாணயம் வெளியீடு

புதுடில்லி : புள்ளியியல் தினத்தை முன்னிட்டு 125 ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை(ஜூன் 29) வெளியிடுகிறார்.
கடந்த 2007ல் ஜூன் 29ம் தேதியை புள்ளியியல் தினமாக மத்திய அரசு அறிவித்தது. அன்று புள்ளியியலாளர் பி.சி.மஹாலனோபிசின் 125வது பிறந்த நாள் என்பதால் சமூக பொருளாதார திட்டமிடலில் புள்ளியியலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் மஹாலனோ பிசின் பங்களிப்புக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
கடந்த 1931ல் ஐ.எஸ்.ஐ., எனப்படும் இந்திய புள்ளியியல் நிறுவனத்தை மஹாலனோபிஸ் துவங்கினார். மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட நடைமுறைப்படுத்தல் அமைச்சகம் மற்றும் இந்திய புள்ளியியல் நிறுவனம் சார்பில் நாளை மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மஹாலனோபிசின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு, 125 மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியிடுகிறார்.


Thanks for 

http://www.dinamalar.com/news_detail.asp?id=2050446

Tuesday, May 15, 2018

Fwd: ​முளைக்கட்டிய தானியங்களில் புதைந்திருக்கும் நன்மைகள்



முளைக்கட்டிய தானியங்களில் புதைந்திருக்கும் நன்மைகள்

முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?
இயற்கை உணவான தானியங்கள் புரதச்சத்தும் ஊட்டச்சத்தும் நிரம்பியது. அவற்றை முளை கட்டப்படுவதால் செரிமானப்பிரச்சனையை ஏற்படுத்தும் பைரேட்ஸ் என்ற சத்து குறைக்கப்படும், சிக்கலான ஸ்டார்ச்சுகள் உடைக்கப்பட்ட எளிதில் செரிமானம் ஆகிடும்.

இப்படி முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

காய்கறி பழங்களை விட அதிக சத்து :

பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை விட அதிக அளவில் வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் அவசியமான கொழுப்பு ஆகியவை உள்ளன .இவை எடையைக் குறைக்கவும், செரிமானத்தை சீராக்கவும் உதவுகிறது. உடலில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் மற்றும் கொழுப்புகளை வெளியேற்றுவதில் முளை கட்டிய தானியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

விட்டமின் :

முளை கட்டிய தானியங்களில், சாதாரண தானியங்களில் உள்ளதை விட 20 மடங்கு அதிகமான அளவில் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக வைட்டமின் ஏ, பி-காம்ப்ளக்ஸ், சி மற்றும் ஈ ஆகியவை அதிரிகரிக்கின்றன.

சரிவிகித உணவு :

தொடர்ந்து சரிவிகிதமான உணவை சாப்பிட முடியாத காரணத்தால், கொழுப்பை எரிக்கக் கூடிய அமினோ அமிலங்கள் போதிய அளவு உற்பத்தி ஆகாமல் இருப்பது இன்று பலரும் எதிர் கொள்ளும் உடல் ரீதியான பிரச்னையாகும். முளை கட்டிய தானியங்களை உட்கொள்வதால் உடலுக்கு அவசியமான அமினோ அமிலங்களை போதிய அளவில் சுரக்கச் செய்ய முடியும்.

எப்போதும் கிடைக்கக் கூடியது:

காய்கறி பழங்கள் போன்றவற்றில் சில அந்தந்த சீசன்களில் தான் கிடைக்கும். ஆனால் தானியங்கள் அப்படியல்ல அத்துடன் இந்த முளைகட்டிய பயிரை வீட்டிலேயே எளிதாக தயாரித்து விடலாம் அதிக செலவும் ஏற்படாது.

சாப்பிடும் நேரம் :

ஒரு நாளைக்கு எதாவது ஒரு வேளை முளைகட்டிய தானியங்களை எடுத்துக் கொள்ளலாம். பாதி உணவும், பாதி முளைகட்டிய தானியங்களும் இருக்குமாறு சாப்பிட்டால் நல்லது.

காலை நேரம் :

முளைகட்டிய தானியங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது காலை உணவுடன் சேர்த்தே சாப்பிட வேண்டும். தானியங்கள் மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் முளைகட்டிய தானியங்களை வேக வைத்து சாப்பிடலாம் .

தனியாக உண்ணுதல் சரியா:

எந்த வேளையும் இந்த முளைகட்டிய தானியங்களை மட்டும் உணவாக சாப்பிடக்கூடாது. இதில் பல்வேறு சத்துக்கள் நிறைந்திருந்தாலும் நம் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட்ஸ் மினரல்ஸ் போன்ற சத்துக்களும் தேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

குழந்தைகள் :

சில சமயங்களில் முளைகட்டிய தானியங்கள் செரிமானக்கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதால் 5 வயதுக்குட்ப்பட்ட குழந்தைகளுக்கு வேகவைக்காமல் கொடுப்பதை தவிர்த்திடுங்கள்.

சுத்தம் :

முளைகட்ட வைக்க சுத்தமான நீரை பயன்படுத்துங்கள். கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் முளைகட்டிய தானியங்கள் வாங்குவதை தவிர்த்திடுங்கள்.அதே போல தினமும் ஒரு வகையான தானியங்களை எடுப்பதற்கு பதிலாக ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான தானியங்களை எடுக்கலாம்.--


****படித்ததில்  பிடித்து 


Saturday, May 12, 2018

Irumbu Thirai - 
Vishal has produced and acted as the protagonist in this new age cyber thriller that speaks in layman terms how the common man's data can be stolen and used against him by the modern criminal.  Debutante director P. Mithran has done extensive research on the modus operandi of the cyber villains and has given a fairly engaging thriller.
Major Kathiravan (Vishal) an army man who has a haunting past wants to leave the country and settle abroad.  He has anger issues and is assigned to a psychiatrist Rathi Devi (Samantha) who as therapy asks him to go to his village and reconcile with his dad ( Delhi Ganesh) and younger sister. The younger sister is in love with a rich man whose parents demand ten lakhs worth of jewellery and the hero and his father try to procure a loan but are turned down by all the banks.  An agent offers to help them in getting a loan from a popular bank and they get the loan but the money disappears from the account and they cannot go to the police as the documents are forged.  Vishal sets out to find the cyber criminal who is known as White Devil (Arjun).  The cat and mouse game between the two forms the rest of the screenplay.
The tall and well built Vishal has no problems convincing the viewer of his army background and needless to say that he excels in the fight scenes, especially the climax encounter with Arjun.  He scores in the emotional department too when he bursts out to his father Delhi Ganesh accusing him of spoiling his life.  Action King Arjun as the sauve and tech savvy villain Sathyamoorthy aka White Devil approaches his role with subtlety and his minute expressions add color to the character.  His punch line that he is the scorpion and all his victims are thieves is received by thunderous applause and Yuvan Shankar Raja does his bit by composing a killer theme for him. Samantha is an eyeful as the psychiatrist Rathi Devi and she too gets her mass moment when she leads the villains into a trap set by the hero.  Robo Shankar's comedy musters a smile most of the time and we can say welcome back Delhi Ganesh for yet another standout performance.  Kaali Venkat, Vincent Asokan and Madhusoodhanan are also in the cast along with a few YouTube stars who are uniformly good.
The detailing that has gone into exposing the data thefts is commendable and the idea that what  if the Aadhar card details get into the wrong hands is really scary (Will also get some free publicity for the film!).  The scene when the heroes friends from the military join in an operation to trap the criminals is exciting.  The backstory of the hero helps in driving the entire screenplay.
On the downside the mandatory love scenes for the hero is a speed breaker and the second half has more talking heads than action.  The writer director has not given the same concentration on making the screenplay more interesting which he has devoted to the detailing done for the cyber theft. There are also a few nagging logical loopholes in the back procedures and their networks.
The background music by Yuvan Shankar Raja is perfectly in sync with the digital theme though the songs have a familiar ring to them. Cinematography, editing  and the art direction are top notch.  P.S. Mithran has made a strong debut with a subject that will connect to many though the screenplay is not all that racy.
MOVIE trailer
https://www.youtube.com/watch?v=ZRas5gKKIp0
https://www.youtube.com/watch?v=3n3L428I8MQ
TAMIL VIMARSANAM:-
http://cinema.dinamalar.com/movie-review/2539/Irmbuthirai/
THANKS FOR. www.indiaglitz.com


102 நாட் அவுட் - விமர்சனம்


102 வயதுள்ள அமிதாப் பச்சனுக்கு,  இந்த உலகிலேயே அதிக வயது வாழ்ந்தவர் என்ற சாதனை புரிய ஆசை. வயதுதான் 102. ஆனால், சிந்தனை எல்லாமே இன்றைய இளைஞர்களைப் போல். எனவே, எப்போதும் ஜாலியாக இருப்பார். ஆனால், அதற்கு முற்றிலும் நேர்மாறான கேரக்டர், 75 வயதாகும் அவரது மகன் ரிஷிகபூர். பழமைவாதி. இப்படிப்பட்டவர்களை முற்றிலுமாக வெறுப்பவர், அமிதாப். தன் வீட்டிலேயே அதுவும் மகனே அதுபோல் இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. இதனால், தன் மகனை முதியோர் இல்லத்துக்கு அனுப்ப முடிவு செய்கிறார். அப்பாவின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைகிறார், ரிஷிகபூர். வீட்டிலேயே தங்க வேண்டும் என்றால், அமிதாப் சில நிபந்தனைகள் விதிக்கிறார். 

அதெல்லாம் ரிஷிகபூருக்கு சவாலாக அமைகிறது. அதைச் செய்து முடித்தால்தான் அவருடைய வீட்டில் இருக்க முடியும். பின்விளைவு என்ன என்பதை ஹியூமரிசமும், ஆங்காங்கே எமோஷனலுமாக, மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது படம். போலிச்சாமியார்கள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான ஓ மை காட் படம் எடுத்து, பாலிவுட்டில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியவர், டைரக்டர் உமேஷ் சுக்லா. அவரது இந்தப் படம், முழுக்க முழுக்க உறவுகளின் உணர்வு களை மென்மையாகப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. அதைக் காமெடி கலந்து சொல்வதுதான் உமேஷ் சுக்லாவின் தனி ஸ்டைல். 

இதிலும் அந்த ஸ்டைலை மெயின்டெயின் செய்திருக்கிறார். 76 வயதுள்ள சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், 102 வயது அப்பா வேடத்தில் அசால்ட் காட்டியிருக்கிறார். அவரது காமெடி டைமிங் எல்லாமே தியேட்டரை அதிரிபுதிரியாக்கி விடுகிறது. அவருக்கு ஈடாக, காட்சிக்குக் காட்சி ஸ்கோர் செய்திருக்கிறார் ரிஷிகபூர். எப்போதும் இறுக்கமாக இருக்கும் அந்த வேடத்தில் ரிஷிகபூரைத் தவிர யாருமே பொருந்தி  இருக்க மாட்டார்கள். ஜிமித் திரிவேதியும் தனது பங்குக்கு அசத்தி இருக்கிறார். 

மூவரையும் சுற்றித்தான் முழு படமும். அதுவும் ஒரே வீட்டில். ‘ஆனால், டல் அடிக்காத காட்சிகளால் தூள் கிளப்பி இருக்கிறார், ஸ்கிரிப்ட் ரைட்டர் சவும்யா ஜோஷி. மராட்டிய மேடை நாடகத்தை தழுவி படம் உருவாக்கப்பட்டுள்ளது. தந்தை, மகனின் பாசக் கதையை, 102-75 வயது என்றவிதத்தில் கையில் எடுத்ததுதான் இந்தப் படத்தின் சிறப்பு. அதில் பல இடங்களில் நம்மைச் சிரிக்க வைத்து, சில இடங்களில் கண்கலங்கச் செய்த வகையில் அழகாகி இருக்கிறது இந்தப் படம். தவறியும் தவற விட்டுவிடக்கூடாத படம் 


  MOVIE TRAILER

https://www.youtube.com/watch?v=qrks9Zu0f1w


THANKS FOR DINAKARAN  CINIMA

TAMIL STORIES WEB PAGE

1.  https://www.ladyswings.in
2.  http://www.penmai.com
3.  http://www.mallikamanivannan.com/
4.  https://www.revadyinkarpanaikal.com/
5.  http://www.tamilsurabi.in
6.  http://enganeshan.blogspot.in/
7.  https://www.chillzee.in/
8.  http://muthulakshmiraghavan.in/
9. https://www.sudharavinovels.com/
10. https://www.smtamilnovels.com
11   http://www.srikalatamilnovel.com/