Monday, July 2, 2018

பான் - ஆதார்' இணைப்பு 2019 மார்ச் வரை நீட்டிப்பு PAN-AADHAAR LINK DATE EXTENDED MARCH 2019

புதுடில்லி : வருமான வரி நிரந்தர கணக்கு எண் எனப்படும், 'பான்' கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம், 2019, மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசு வழங்கும் பல்வேறு சேவைகளுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்காக, இந்தாண்டு மார்ச், 31 வரை அவகாசம் தரப்பட்டிருந்தது. அந்த அவகாசத்தை நீட்டிக்கும்படி, இந்தாண்டு துவக்கத்தில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இறுதி உத்தரவு :

அந்த உத்தரவில், 'ஆதார் தொடர்பான வழக்குகளில், ஐந்து நீதிபதிகள் அடங்கிய
அரசியல் சாசன அமர்வு, இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை, ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.

ஆதார் தொடர்பான வழக்கில், இறுதி தீர்ப்பு அளிக்கப்படாத நிலையில், மத்திய அரசு வரித் துறையின் கொள்கை உருவாக்கும் பிரிவான, சி.பி.டி.டி., எனப்படும், மத்திய நேரடி வரிகள் வாரியம், பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசத்தை, 2019 மார்ச், 31 வரை நீட்டித்துள்ளது.
அவகாசம் :

ஐந்தாவது முறையாக, இந்த அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும், 33 கோடி பேருக்கு, பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில், 16.65 கோடி பான் கார்டுகள், மார்ச் வரை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன

THANKS FOR 
http://www.dinamalar.com/news_detail.asp?id=2052832

Saturday, June 30, 2018

ஆடிட்டர்கள் திடீரென விலக என்ன காரணம்? : நிறுவனங்களிடம் விளக்கம் கோருகிறது மத்திய அரசு

புதுடில்லி: கணக்கு தணிக்கை செய்­யும் ஆடிட்­டர்­க­ளின் வில­க­லுக்­கான கார­ணங்­களை தெரி­விக்­கு­மாறு, சம்­பந்­தப்­பட்ட கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­க­ளுக்கு, மத்­திய அரசு கடி­தம் அனுப்­பி­யுள்­ளது.கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­க­ளின் வரவு – செலவு கணக்கை தணிக்கை செய்­யும் பணி­யில் இருந்து ஆடிட்­டர்­கள் வில­கு­வது, சமீப கால­மாக அதி­க­ரித்­துள்­ளது.புதிய கம்­பெ­னி­கள் சட்­டம், கார்ப்­ப­ரேட் நிறு­வ­னத்­தின் நிதி முறை­கே­டு­க­ளுக்கு, ஆடிட்­ட­ரை­யும் பொறுப்­பாக்கி, அப­ரா­த­மு­டன், 10 ஆண்­டு­கள் சிறை தண்­டனை அளிக்க வகை செய்­கிறது.இதன் கார­ண­மாக, வர்த்­த­கம் மற்­றும் நிதி விப­ரங்­களை சரி­வர அளிக்­காத நிறு­வ­னங்­களை விட்டு, ஆடிட்­டர்­கள் வெளி­யே­று­கின்­ற­னர்.கடந்த மே மாதம், பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லி­டப்­பட்ட, 42 நிறு­வ­னங்­களில் இருந்து, ஆடிட்­டர்­கள் திடீ­ரென வில­கி­னர். இதை­ய­டுத்து, அந்த நிறு­வ­னங்­களில், நிதி முறை­கே­டு­கள் நடை­பெற்­றுள்­ளதா... ஆடிட்­டர்­கள் வில­க­லுக்கு உண்­மை­யான கார­ணம் என்ன என்­பதை விசா­ரிக்­கு­மாறு, மேற்கு மண்­டல நிறு­வ­னங்­கள் பதி­வா­ளர் இயக்­கு­னர்­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.
இது குறித்து, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­களில் இருந்து, திடீ­ரென அதிக அள­வில் ஆடிட்­டர்­கள் வெளி­யேறி வரு­கின்­ற­னர். அதற்­கான கார­ணத்தை தெரி­விக்­கு­மாறு, அந்த நிறு­வ­னங்­க­ளுக்கு அமைச்­ச­கம் கடி­தம் அனுப்­பி­யுள்­ளது.அதில், வில­க­லுக்­கான அடிப்­படை கார­ணங்­களை அறிந்து கொள்­ளும் வகை­யில், 45 கேள்­வி­கள் கேட்­கப்­பட்­டுள்­ளன. அவற்­றுக்கு, நிறு­வ­னங்­கள் அளிக்­கும் பதிலை பொறுத்து, அடுத்த கட்ட நட­வ­டிக்கை துவங்­கும். ஒரு நிறு­வ­னத்­தின் அன்­றாட நிதிப் பரி­வர்த்­த­னை­களை அறிந்­தி­ருக்­கும் ஆடிட்­ட­ருக்கு, அந்­நி­று­வ­னத்­தின் நிதி தவ­றாக கையா­ளப்­ப­டு­வது குறித்து எது­வுமே தெரி­யாது என்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அப்­படி இருக்­கும்­போது, உட­ன­டி­யாக அது குறித்து நிறு­வ­னங்­க­ளி­டம் விளக்­கம் கேட்க வேண்­டி­யது, ஆடிட்­ட­ரின் கடமை. அவ்­வாறு இருக்­கும்­பட்­சத்­தில், ஆடிட்­டர் ஏன் தலை­யி­ட­வில்லை என்ற கேள்வி எழு­கிறது.அத­னால், ஆடிட் நிறு­வ­னங்­கள், ஆடிட் குழு தலை­வர்­கள், தனி ஆடிட்­டர்­கள் ஆகி­யோ­ரை­யும் அழைத்து, வில­க­லுக்­கான கார­ணம் குறித்து விசா­ரிக்க, அமைச்­ச­கம் முடிவு செய்­துள்­ளது. நிறு­வ­னங்­கள் சட்­டத்­தின்­படி, ஒரு நிறு­வ­னத்­தின் ஆண்டு கணக்­கு­கள் மற்­றும் நிதி நில­வ­ரம் குறித்த வெளிப்­ப­டை­யான தக­வல்­களை அளிக்க வேண்­டிய முக்­கிய பொறுப்பு, ஆடிட்­ட­ருக்கு உள்­ளது. அந்த தக­வல்­கள், உரிய கணக்­கீட்டு நடை­மு­றைப்­படி அளிக்­கப்­பட்­டுள்­ளதா என்­பதை ஆய்வு செய்­யும் உரி­மை­யை­யும், சட்­டம் வழங்­கு­கிறது. அத­னால், ஒரு நிறு­வ­னத்­தில் இருந்து ஆடிட்­டர் விலகி, புதிய ஆடிட்­டர் இணை­யும்­போது, அதற்­கான உண்­மை­யான கார­ணத்தை, இரு தரப்­பி­ன­ரி­டம் அறிந்து கொள்ள, அமைச்­ச­கம் விரும்­பு­கிறது. தற்­போது, அதற்­கான நட­வ­டிக்கை துவங்­கி­யுள்­ளது.இவ்­வாறு அவர் தெரி­வித்­தார்.
சமீ­பத்­தில், மன்­ப­சந்த் பிவ­ரே­ஜஸ், வக்­ரங்கி, ஜெட் ஏர்­வேஸ், எல் அண்டு டி கப்­பல் பிரிவு, அட்­லாண்டா, ஐநாக்ஸ் விண்டு உள்­ளிட்ட நிறு­வ­னங்­களில் இருந்து, ஆடிட்­டர்­கள் வெளி­யே­றி­னர்.இதற்கு, நிறு­வ­னங்­கள் வெளிப்­ப­டை­யாக விப­ரங்­களை தெரி­விக்­கா­ததே கார­ணம் என, கூறப்­ப­டு­கிறது


THNAKS FOR THE 
http://business.dinamalar.com/news_details.asp?News_id=42781&cat=1

Friday, June 29, 2018

வேலையிழந்த 30 நாட்களுக்கு பின்னர் 75 சதவீத பிஎப் (EPF) தொகையை எடுத்துக் கொள்ள அனுமதி

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் சந்தாதாரர்கள், வேலையிழந்த 30 நாட்களுக்கு பின்னர் 75 சதவீத பிஎப் தொகை எடுத்துக் கொள்ளலாம்.
தொழிலாளர்கள் வேலையிலிருந்து விலகிய ஒரு மாதத்துக்கு பின்னர் தங்களது இபிஎப் கணக்கிலிருந்து 75 சதவீத தொகையை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்க இபிஎப் அமைப்பு முடிவு செய்துள்ளது. மேலும் மீதமுள்ள 25 சதவீத தொகையை 2 மாதங்களுக்கு பின்னர் எடுத்துக் கொள்ளவும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் வகை செய்கிறது.
தொழிலாளர்கள் வேலையிலிருந்து விலகிய 30 நாட்களில் தங்களது பிஎப் கணக்கிலிருந்து முன்பணம் எடுத்துக் கொள்வதை அனுமதிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி பிஎப் கணக்கிலிருந்து 75 சதவீதத்தை எடுத்துக் கொண்டு கணக்கை அப்படியே தொடரலாம் என்று மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வர் கூறினார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் மத்திய காப்பாளர் குழு தலைவராகவும் கங்வார் உள்ளார். காப்பாளர் குழு கூட்டத்துக்கு பின்னர் இதனை அமைச்சர் கூறினார்.
தற்போதுவரை தொழிலாளர்கள் வேலையை விட்டு விலகினால் அவர்களது பிஎப் கணக்கிலிருந்து இரண்டு மாதங்களுக்கு பின்னரே இபிஎப் கணக்கிலிருந்து தொகையை எடுக்க முடியும்.
இந்த புதிய மாற்றத்தின் மூலம் தொழிலாளர்கள் தங்களது இபிஎப் கணக்கை அப்படியே தொடரவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிதாக வேலைக்குச் சேர்ந்தால் இந்த கணக்கை பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும் தொழிலாளர்கள் வேலையிழந்த 30 நாட்களில் 60 சதவீத பணத்தை எடுக்கவே முன்மொழியப்பட்டிருந்தது, ஆனால் நேற்று நடைபெற்ற மத்திய காப்பாளர் குழு கூட்டத்தில் இந்த அளவை 75 சதவீதம் உயர்த்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இடிஎப் பண்டு நிறுவன முதலீடு செய்வதும் தொடரும் என்றும் அமைச்சர் கூறினார். -பிடிஐ

THANKS FOR 
THE HINDU TAMIL PAPER
http://tamil.thehindu.com/business/article24265232.ece?utm_source=HP-RT&utm_medium=hprt-most-read

இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத சரிவு: அமெரிக்கா மிரட்டல் எதிரொலி

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில் இன்று வரலாற்றில் இல்லாத அளவாக டாலருக்கு எதிராக 69 என்ற அளவில் கடும் சரிவை சந்தித்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அண்மைகாலமாகவே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இதுமட்டுமின்றி அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தக போரை சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டுள்ளது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேற்கொண்டு வரும் வர்த்தகப் போரால் சில நாட்களாக ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்து வருகிறது.
இந்நிலையில் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என இந்தியாவுக்கு நேற்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. நவம்பருக்குள் ஈரானிடம் இருந்து முழுமையாக கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.
ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தியை முடக்கும் அமெரிக்காவின் இந்த திடீர் மிரட்டலால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் சூழல் உள்ளது. குறிப்பாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் ஏறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மேலும் சரிந்தது.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ரூ 68.25 என்ற அளவில் இருந்தது. ஆனால் புதன்கிழமை 36 காசுகள் மேலும் சரிந்து ரூ 68.61 என்ற அளவுக்கு கீழிறங்கியது. வியாழக்கிழமையான இன்று ரூபாய் மதிப்பு மேலும் சரிந்து 69.10 ஆக வீழ்ச்சியடைந்தது. இந்த சரிவு வரலாற்றில் இல்லாத சரிவாகும்.
நிலைமை சீரடையாவிடில் அடுத்த சில வாரங்களில் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ரூ 70 என்ற அளவுக்குக் கீழிறங்கக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
THANKS TO 
THE HINDU TAMIL PAPER
http://tamil.thehindu.com/business/article24277003.ece

Thursday, June 28, 2018

மூன்றாம் தரப்பு தணிக்கை தயாராகும் ஜி.எஸ்.டி.என்., நிறுவனம்

சரக்கு மற்­றும் சேவை வரியை நிர்­வ­கிக்­கும் நிறு­வ­ன­மான, ஜி.எஸ்.டி.என்., அதன் மென்­பொ­ருளை, மூன்­றாம் தரப்பு தணிக்­கைக்கு உட்­ப­டுத்த இருப்­ப­தாக, அதன் தலைமை செயல் அதி­காரி, பிர­காஷ் குமார் தெரி­வித்­துள்­ளார்.

ஜி.எஸ்.டி.என்., நிறு­வ­னம், சரக்கு மற்­றும் சேவை வரியை வசூ­லிக்க தேவை­யான தக­வல் தொழில்­நுட்­பத்தை வழங்கி வரு­கிறது. இதற்கு தேவைப்­படும் மென்­பொ­ருளை, இன்­போ­சிஸ் நிறு­வ­னம் உரு­வாக்கி கொடுத்­துள்­ளது. இதில், 1.11 கோடி வணி­கங்­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. இந்­நி­லை­யில், இந்­நி­று­வ­னத்­தின் மென்­பொ­ருள் பாது­காப்பு உள்­ளிட்­ட­வற்றை, மூன்­றாம் தரப்பு தணிக்­கைக்கு உட்­ப­டுத்த இருப்­ப­தாக, பிர­காஷ் குமார் தெரி­வித்­துள்­ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது: வங்­கி­கள் மற்­றும் நிதி நிறு­வ­னங்­கள், மூன்­றாம் தரப்பு தணிக்­கைக்கு தங்­களை உட்­ப­டுத்­திக்­கொள்­வது வழக்­க­மான நடை­மு­றை­யாக உள்­ளது. அதே போன்ற நடை­மு­றையை, ஜி.எஸ்.டி.என்., நிறு­வ­னத்­தி­லும் கொண்டு வர இருக்­கி­றோம். எப்­போ­தெல்­லாம், ஜி.எஸ்.டி., குறித்த சட்­டங்­கள் மாற்­றத்­துக்கு உள்­ளா­கி­றதோ அல்­லது எப்­போ­தெல்­லாம் சுற்­ற­றிக்கை வரு­கி­றதோ அப்­போ­தெல்­லாம், இன்­போ­சிஸ் மூலம் நாங்­கள் மென்­பொ­ரு­ளில் மாற்­றம் செய்­கி­றோம்.

இந்த மாற்­றங்­களை மூன்­றாம் தரப்பு தணிக்­கைக்கு உட்­ப­டுத்த விரும்­பு­கி­றோம். கடந்த, 2017 ஜூலை, 1ம் தேதி முதல், ஜி.எஸ்.டி.என்., நிறு­வ­னம், 11.5 கோடி வரி தாக்­கல்­க­ளை­யும், 376 கோடி விலை பட்­டி­யல்­க­ளை­யும் கையாண்­டு உள்ளது. தற்­போது, 1.11 கோடி வணி­கங்­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. இதில், 63.76 லட்­சம் வணி­கங்­கள், சேவை வரி மற்­றும் வாட் வரி­யி­லி­ருந்து மாறி வந்­துள்­ளன. மேலும், 47.72 லட்­சம் வணி­கங்­கள், புதி­தாக பதிவு பெற்­றுள்­ளன. 17.61 லட்­சம் வணி­கங்­கள், கலவை வரி திட்­டத்தை, ஜி.எஸ்.டி.,யின் கீழ் ஏற்­றுள்­ளன. இவ்­வாறு அவர் தெரி­வித்­துள்­ளார்.


THANKS

http://business.dinamalar.com/news_details.asp?News_id=42755

‘மைண்டு டிரீ’ நிறுவனர் பங்குகள் விற்பனை


புது­டில்லி : தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான, ‘மைண்­டு­ டிரீ’ நிறு­வ­னத்­தின் நிறு­வ­னர்­கள், அந்­நி­று­வ­னத்­தில், தங்­க­ளுக்கு இருக்­கும் பங்­கு­களை விற்­கும் முயற்­சி­யில் இறங்கி இருக்­கின்­ற­னர்.

தக­வல் தொழில்­நுட்ப துறை­யில், மென்­பொ­ருள் சேவை பிரி­வில் இயங்கி வரும் முன்­னணி நிறு­வ­னங்­களில் ஒன்று, மைண்­டு­ டிரீ. இந்­நி­று­வ­னத்­தின் நிறு­வ­னர்­கள், தங்­கள் பங்­கு­களை விற்­பனை செய்­வ­தற்­காக, இரண்டு வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளு­டன் பேசி வரு­வ­தாக செய்­தி­கள் வரு­கின்­றன. குறிப்­பாக, ஜப்­பான் நாட்­டைச் சேர்ந்த, என்.இ.சி., கார்ப் நிறு­வ­னம், பங்­கு­களை வாங்­கு­வது குறித்து பேச்சு நடத்தி வரு­கிறது.

மைண்­டு­ டிரீ நிறு­வ­னத்­தில், சுப்­ரதோ பக்‌ஷி, கே.நட­ரா­ஜன், என்.எஸ்.பார்த்­த­சா­ரதி மற்­றும் நிறு­வ­னத்­தின் தலைமை செயல் அதி­கா­ரி­யான, ரோஸ்­டவ் ராவ­ணன் ஆகி­யோ­ரின் பங்­கு­களை வாங்­கு­வது குறித்து பேச்சு நடை­பெ­று­கிறது. இந்­நி­று­வ­னத்­தில் இவர்­கள் வசம், 13.35 சத­வீத பங்­கு­கள் உள்­ளன; இவற்­றின் தற்­போ­தைய சந்தை மதிப்பு, 2,087.15 கோடி ரூபா­யா­கும். இந்த பங்­கு­களை வாங்­கு­வ­தற்­காக, என்.இ.சி., கார்ப் நிறு­வ­னம், பேங்க் ஆப் அமெ­ரிக்கா மெரில் லிஞ்ச் நிறு­வ­னத்தை ஆலோ­ச­க­ராக நிய­மித்­துள்­ளது.

இதற்­கி­டையே, மைண்­டு­ டிரீ நிறு­வ­னத்­தில், 20 சத­வீ­தத்­துக்­கும் அதி­க­மான பங்­கு­களை வைத்­தி­ருக்­கும், ‘கேப் காபி டே’ நிறு­வ­னத்­தின் நிறு­வ­னர், வி.ஜி.சித்­தார்த்­தா­வும் தன் பங்­கு­களை விற்­று­வி­டும் எண்­ணத்­தில் இருப்­ப­தாக செய்­தி­கள் வரு­கின்­றன.

THANKS FOR 

http://business.dinamalar.com/news_details.asp?News_id=42757

முதலீட்டை உடனே திரும்ப பெறுங்கள்: ஜெப்பே


புது­டில்லி : இந்­தி­யா­வின் பிர­ப­ல­மான, கிரிப்­டோ­க­ரன்சி எக்ஸ்­சேஞ்ச் ஆன, ஜெப்பே, அவ­சர அறி­விப்பு ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது. தங்­கள் முத­லீட்டை ரூபா­யாக திரும்ப பெற்­றுக்­கொள்ள விரும்­பும் வாடிக்­கை­யா­ளர்­கள், உடனே அணுகி, பணத்தை பெற்­றுக்­கொள்­ளு­மாறு அந்­நி­று­வ­னம் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

கடந்த ஏப்­ர­லில், ரிசர்வ் வங்கி ஒரு சுற்­ற­றிக்­கையை, அதன் கட்­டுப்­பாட்­டுக்­குள் வரும் வங்­கி­கள் உள்­ளிட்ட நிதி நிறு­வ­னங்­க­ளுக்கு அனுப்­பி­யது. அதில், கிரிப்­டோ­க­ரன்சி எனும் மெய்­நி­கர் நாணய வணி­கத்­தில் ஈடு­படும் நிறு­வ­னங்­க­ளு­ட­னான தொடர்பு தடை செய்­யப்­ப­டு­வ­தா­க­வும், மூன்று மாதங்­க­ளுக்­குள்­ளாக, வங்­கி­கள் இத்­த­கைய வணி­கத்­தில் ஈடு­படும் நிறு­வ­னங்­க­ளின் தொடர்­பி­லி­ருந்து வெளி­யே­றி­வி­டும்­ப­டி­யும் அறி­வு­றுத்தி இருந்­தது. அந்த காலக்­கெடு வரும் ஜூலை, 6ம் தேதி­யு­டன் முடி­வ­டை­கிறது.

இந்­நி­லை­யில், மெய்­நி­கர் நாணய சந்­தை­யான ஜெப்பே, முத­லீட்டை ரூபா­யாக திரும்ப பெற விரும்­பும் வாடிக்­கை­யா­ளர்­கள், விரைந்து தொகையை பெற்­றுக்­கொள்­ளு­மாறு அறி­விப்பு செய்­துள்­ளது.

இது குறித்து அந்­நி­று­வ­னம் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது: ரிசர்வ் வங்­கி­யின் அறி­விப்பை அடுத்து, வங்­கி­களில் ரூபா­யாக டெபா­சிட் செய்­வதோ அல்­லது எடுப்­பதோ இனி இய­லாத ஒன்­றா­கி­வி­டும். இத­னால், மெய்­நி­கர் நாண­யங்­களில் ரூபா­யில் வர்த்­த­கம் செய்­வது நின்­று­வி­டும். எனவே, வாடிக்­கை­யா­ளர்­கள் பணத்தை திரும்ப பெற விரும்­பி­னால், உடனே வந்து பெற்­றுக்­கொள்­ள­வும். காலக்­கெ­டு­வுக்கு பிறகு முடி­யா­மல் போய்­வி­டும்.

மெய்­நி­கர் நாணய வணி­கத்­தில் ஈடு­பட்­டுள்ள நிறு­வ­னங்­கள், ரிசர்வ் வங்­கி­யின் இந்த சுற்­ற­றிக்­கைக்கு எதி­ராக உச்ச நீதி­மன்­றத்­துக்கு சென்­றுள்ளன. இவ்­வாறு ஜெப்பே அறி­வித்­துள்­ளது. இதற்­கி­டையே மெய்­நி­கர் நாணய வணிக நிறு­வ­னங்­கள், ரிசர்வ் வங்­கிக்கு கீழ் வராத, பொதுத்­துறை வங்­கி­யான, ஸ்டேட் பேங்க் ஆப் சிக்­கிம் – ஐ ஒரு வாய்ப்­பாக பயன்­ப­டுத்­த­லாம் என, தெரி­வித்­துள்­ளன.


THANKS FOR 
http://business.dinamalar.com/news_details.asp?News_id=42759

புள்ளியியல் தினத்தை சிறப்பிக்க 125 ரூபாய் நாணயம் வெளியீடு

புதுடில்லி : புள்ளியியல் தினத்தை முன்னிட்டு 125 ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை(ஜூன் 29) வெளியிடுகிறார்.
கடந்த 2007ல் ஜூன் 29ம் தேதியை புள்ளியியல் தினமாக மத்திய அரசு அறிவித்தது. அன்று புள்ளியியலாளர் பி.சி.மஹாலனோபிசின் 125வது பிறந்த நாள் என்பதால் சமூக பொருளாதார திட்டமிடலில் புள்ளியியலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் மஹாலனோ பிசின் பங்களிப்புக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
கடந்த 1931ல் ஐ.எஸ்.ஐ., எனப்படும் இந்திய புள்ளியியல் நிறுவனத்தை மஹாலனோபிஸ் துவங்கினார். மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட நடைமுறைப்படுத்தல் அமைச்சகம் மற்றும் இந்திய புள்ளியியல் நிறுவனம் சார்பில் நாளை மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மஹாலனோபிசின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு, 125 மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியிடுகிறார்.


Thanks for 

http://www.dinamalar.com/news_detail.asp?id=2050446